ஹரி பத்மன் ஜாமின் மனு நிராகரிப்பு!

Filed under: தமிழகம் |

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலாஷேத்ரா விகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன்னுக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஹரி பத்மன் உள்பட நான்கு பேர் மீது சென்னையிலுள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக கடும் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நேற்று இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஹரிபத்மன் வெளியே வந்தால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என காவல்துறையினர் விளக்கமளிக்கப்பட்டதை அடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஹரி பத்மன் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.