அக்கா இறுதி ஊர்வலத்தில் குத்தாட்டமிட்ட தங்கை!

Filed under: சென்னை |

பெண் சமோசா வியாபாரி சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.அவரது இறுதி ஊவலத்தின்போது, அவரது தங்கை நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவலாகி வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவு இவர் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். ராஜேஸ்வரியின் தங்கை நாகவைக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, ராஜேஸ்வரி தன் தங்கை நாகவள்ளியை கண்டித்து, சக்திவேலுடன் பேசக் கூடாது என எச்சரித்துள்ளார். இதனால், தன் அக்காவின் மீது ஆத்திரத்தில் இருந்த நாகவள்ளி, தன் உறவினனர், ஜெகதீசன் ஆகியோருடன் திட்டமிட்டு, ராஜேஸ்வரியை படுகொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக தன் உடன் பிறந்த சகோதரி ராஜேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில் நாகவள்ளி குத்தாட்டம் போட்டிருக்கிறார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.