“அக்னிபாத்” திட்டம் அறிமுகம்!

Filed under: இந்தியா |

குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது.

இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் ராணுவ சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலமாக 45 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் உடற்தகுதி தேர்விற்கு பிறகு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படுவர். 4 ஆண்டுகாலம் பணி முடிந்ததும் அதில் சிறப்பாக செயலாற்றிய 25 சதவீதம் பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.