அச்சப்படமாட்டோம்; சீமானின் தேர்தல் பரப்புரை!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்படமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேறு சின்னம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்திய தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இன்று கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அவர், “எங்கள் சின்னத்தைக் கூட ஒலிவாங்கி என்று கூறினால் மக்களுக்குப் புரியாத நிலை, மைக் என்று சொல்ல வேண்டியுள்ளது. எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எங்களை ஆவேசப்படுத்துமே தவிர அச்சப்படுத்தாது. பல ஆண்டுகளாக நம் தமிழ்மொழி சிதைந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். காங்கிரஸ் மற்றும் பாஜக நம் மொழிக்காக, உரிமைக்காக நின்றுள்ளார்களா? இலங்கை கடற்படையினர் எத்தனை படகுகள் மற்றும் மீனவர்களை பிடித்துள்ளார்கள்? காங்கிரஸ் மற்றும் பாஜக அதற்கு ஒரு தீர்வு கொண்டு வந்ததுண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.