அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

Filed under: சினிமா |

கடந்த சில மாதங்களாக நடிகர் அஜீத் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட அவர் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

அடுத்த வாரம் சென்னை திரும்பும் அஜீத் அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஜீத்தின் அடுத்த கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜீத் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டார் என்றும் அது மட்டுமின்றி அண்டை நாடுகளான பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் சென்று விட்டார் என்றும் பல சவாலான பாதைகளை அவர் கடந்துவிட்டார். இதையடுத்து அஜீத்தின் அடுத்தகட்ட பைக்ட் டூர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் என்று சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.