இயக்குனர் அட்லி “ராஜா ராணி,” “தெறி,” “மெர்சல்” மற்றும் “பிகில்” என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்தார். அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கினார்.
செப்டம்பர் 7ம் தேதி 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த “ஜவான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அட்லி அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு 3 கதைகளை தான் சொல்லியுள்ளதாக அட்லி கூறியுள்ளார். ஆனால் அந்த படம் சரியான நேரத்தில் அமையவேண்டும் எனவும், பாட்ஷாவை விட ரஜினியை மாஸாக காண்பிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.