அண்ணாமலையின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வன் நேர்காணல் நடத்தினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சி தொடர்பாக நெறியாளர் கார்த்திகை செல்வனை பற்றியும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தியதாக அண்ணாமலைக்கு நேற்று WJUT கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.