அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குண்டு மிரட்டல!

Filed under: சென்னை |

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து விசாரணை செய்தபோது அது போலியான மிரட்டல் என்று தெரிய வருகிறது.

சமீப காலத்தில் மூன்று முறை சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து விட்டது. அதேபோல் கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவு இந்த இமெயில் வந்ததையடுத்து உடனடியாக மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். முழுமையான சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் நபரை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.