அதானி வழக்கு நாளை விசாரணை!

Filed under: இந்தியா |

நாளை அதானி பங்குசந்தை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த கௌதம் அதானியின் அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. உலக பணக்காரர்களில் 3வது இடத்தில் இருந்த அதானி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பங்குசந்தை முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த பொதுநல வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்த அதானி பங்குகள் நேற்று சற்று உயர்வை சந்தித்தன. இன்று மீட்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு ஒரே நாளில் ரூ.323 சரிந்து ரூ.1834 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதுபோல அதானி போர்ட், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன் உட்பட பல நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.