அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் செந்தில்பாலாஜி 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவதை குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், “கைத்தறி, விசைத்தறி, 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்திலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படும். அவை நிறுத்தப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மின் வாரிய அலுவலகங்களில் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளும் இணைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஐந்து இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் உண்டு. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை 15 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.