“அயலான்”க்கு சம்பளம் வாங்கவில்லை; சிவகார்த்திகெயன் தகவல்!

Filed under: சினிமா |

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசுக்காக தயாராகி உள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். “அயலான்” படம் பற்றி பேசியுள்ள சிவகார்த்திகேயன் இத்திரைப்படம் ரிலீசாவதற்காக தான் சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “இந்த படம் ரிலீசாகவேண்டுமா அல்லது எனக்கு சம்பளம் வேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருந்தது. அதனால் நான் “அயலான்” படத்துக்காக சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை”