அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி!

Filed under: அரசியல்,இந்தியா |

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜக மீதோ, மோடி மீதோ மக்கள் மத்தியில் கோபம் இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதே அளவு வெற்றி பெறும் அல்லது அதைவிட சிறப்பாக வெற்றி பெறும் என்று தான் கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் முடிவை தலைகீழாக புரட்டிப் போடும் வகையில் மக்களுக்கு மத்திய அரசு மீது எந்த கோபமும் இல்லை. ஒரு சில அதிருப்தி மற்றும் மோடி மீது கோபம் இருந்தாலும் அவை பெரிய அளவில் இல்லை. இதனால் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக நான் கணிக்கிறேன். இந்தியா கூட்டணியில் பல முரண்பாடுகள் இருக்கிறது. ராகுல் காந்தியை அந்த கூட்டணியில் உள்ளவர்களே பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தியா கூட்டணி அதிகபட்சமாக 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை” என்று கூறியுள்ளார். சில அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட அதையேதான் பிரசாந்த் கிஷோரும் கணித்துள்ளார்.