அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

Filed under: அரசியல்,இந்தியா |

அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தபப்ட்டது என குற்றம் சாட்டிருந்தது. இவ்வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர். அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், “நேரில் ஆஜராகாத தன்னை ED கைது செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி’’ டில்லி ஐகோர்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால், டில்லி ஐகோர்ட் அந்த உத்தரவிட மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் அவர் டில்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ED அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது கைது செய்து அவரிடம் கைது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் உள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி என் வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. சிறையில் இருந்தாலும் நாட்டிற்கு சேவை செய்வேன். விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” என்று கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். எந்த ஒரு சிறையும் என்னை உள்ளே வைத்திருக்க முடியாது என்று அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, வரும் 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.