அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டன என்பதும் ஏராளமான மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அரையாண்டுதேர்வு டிசம்பர் 23ம் தேதி முடிவடையும் நிலையில் 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையில் கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறையும் அடங்கும். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.