ஆம் ஆத்மி கட்சியினரிடையே மோதல்!

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லியில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரை அவரது கட்சியினரே சட்டையை பிடித்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சம்பித் பத்ரா என்பவர் தனது கட்சித் தொண்டர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அக்கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவின் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது கட்சியினரே சென்றனர். மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அவர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயந்து ஓட தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. டில்லியில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.