ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் ஏற்கனவே விலை உயர்ந்துள்ளது. இதில் பால் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

இன்று முதல் ஆவின் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், புதிய விலை அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தான் பால் விலை உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பால் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆவின் பொருள்களான பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவையும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இதன் புதிய விலைகளின் பட்டியலின் படி, பன்னீர் 1 கி.கி -ரூ.550, பன்னீர் 1/2 கி.கி -ரூ. 300, பன்னீர் 200 கி ரூ.120, பாதாம் மிக்ஸ் 200 கிராம்- ரூ.120 என்ற விலைப்படி விற்பனை செய்யப்பட உள்ளது.