இன்று மலாலா தினம்!

Filed under: உலகம் |

பாகிஸ்தானின் மிங்கோரா பகுதியை சேர்ந்த மலாலா யூசுப்சய். இவரை போற்றும் விதமாக இன்று மலாலா தினம் கொண்டாடப்படுகிறது.

மலாலா யூசுப்சய் சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மலாலா குழந்தைகளின் கல்வி தொடர்பான சமூக சேவைகளிலும் ஆர்வமுள்ளவர். தாலிபான் அதிகாரமிக்க பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது. 2009 முதலாக பிபிசிக்கு அங்கு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி குறித்து மலாலா தொடர்ந்து எழுதினார். இந்நிலையில்தான் 2012ம் ஆண்டில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தாலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மலாலா உலகம் முழுவதும் கல்வி மறுக்கப்பட்ட பெண்களின் அடையாளமாகவே பார்க்கப்பட்டார். உயிர் பிழைத்து மீண்டு வந்த மலாலா உலகம் முழுவதிலும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். ஐநா சபை இவரை பெண் குழந்தைகள் கல்விக்கான தூதராக கவுரவப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மலாலா பிறந்த தினமான ஜூலை 12ம் தேதியை மலாலா தினமாக ஐ.நா சபை கடந்த 2013 முதலாக அங்கீகரிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.