உதயநிதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Filed under: தமிழகம் |

சேப்பாக்கம் தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் உதயநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், “உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அளித்துள்ளார். தன் மீது எந்த வழக்குமில்லை என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவை ஏற்றது தவறானது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.