முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில், மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை; தேமுதிக திட்டவட்டம்!
வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்



