உலகசந்தையில் உச்சத்தை தொட்ட கோதுமை!

Filed under: இந்தியா |

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை மளமளவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் உலக சந்தையில் கோதுமை விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பியாவில் கோதுமை டன் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்று வருவதாகவும் இது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது. கோதுமை உற்பத்தியில் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், தற்போது உள்நாட்டிலேயே பற்றாக்குறை.இதன் காரணமாகதான் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.