உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது!

Filed under: சென்னை |

சட்டவிரோதமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. இன்று இரண்டு பெண்கள் உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தியதாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பெண்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பினர். இருவரையும் சந்தேகப்பட்ட சுங்கத்துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அவர்கள் தங்கள் உள்ளாடையிலும், சூட்கேசிலும் கடத்திய தங்கம் பிடிபட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்பிலான 10.3 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், இரு பெண்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.