எச்.ராஜா கடும் விமர்சனம்!

Filed under: அரசியல் |

எச்.ராஜா பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி ஜிஆர் வைத்தியநாதன் அவர்கள் உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. “சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன். இந்த டேட்டா திருடன், விசாகா கமிட்டி முன்பு பாலியல் குற்றச்சாட்டு எதிர கொண்டு வருபவன் ஆதாரமின்றி அனைவரையும் விமரிசிப்பவன் எனது பெயரின் முதல் எழுத்தை இழிவாக எழுதுபவன்” என எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பல குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.