எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை!

Filed under: அரசியல்,தமிழகம் |

சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் விசாரணை செய்து வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முன் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருக்கமான சிலருடைய வீட்டில் சமீபத்தில் சோதனை நடந்தது. தற்போது ஈரோடு மண்டல அதிமுக ஐடி விங் நிர்வாகி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினரான கவின்ராஜ் வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி கவின்ராஜிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.