சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை !

Filed under: தமிழகம் |

சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் அந்த உடலை 4 பேர் தூக்கி செல்லும் காட்சியின் சிசிடிவி வெளியாகியுள்ளது. விடுதி உட்பட 4 பேர் மாணவியின் உடலை தூக்கிச் சென்ற காட்சி உள்ள நிலையில் இந்த வீடியோ குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறும் போது, “கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாராவதும் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிபிசிஐடி புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் யாரேனும் வீடியோ காட்சிகளை பதிவிடக்கூடாது; மீறினால் அவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்படும்” என எச்சரித்துள்ளது.