ஒருவர் மீது ஒருவராக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு!

Filed under: இந்தியா |

பாதுகாவலர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா மீது கடந்த மே மாதம் 29ம் தேதி ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவரது தந்தை பால்கவுர் சிங் மீதும் ரவுடிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல் வெளியானது. எனவே பஞ்சாப் காவல்துறை பல்கவுர் சிங்கிற்கு நவ்ஜோத் சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பிற்கு நியமித்தனர். நேற்று முன் தினம் பஞ்சாபில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குர்வினந்தர் சிங்கின் மீது மற்றொரு பாதுகாவலரான நவ்ஜோத் சிங் துப்பாக்கியால் சுட்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் குர்வித் சிங்கை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.