ஓசூரில் சர்வதேச விமான நிலையம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் பேசினார். “தமிழகம் நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவின் முதல் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது. தமிழகத்தை முக்கிய பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு உள்கட்டமைப்பு தேவை. அதனால் தான் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது. 2000 ஏக்கரில் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.