பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் பேட்டி!

Filed under: சென்னை |

மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் விகே சிங் பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அந்த பகுதி விவசாயிகள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் நெல்லையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விகே சிங் பேட்டியளித்துள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது மத்திய அரசுதான் என்ற தகவல் இணையதளங்களில் பரவி வருவதால், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.