ஓலாவின் அறிவிப்பு!

Filed under: இந்தியா |

ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் பெட்ரோல்- டீசல் விலைவாசி உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் இதற்கு மாற்று வழியை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வகையில், டாடா, ஹூண்டாய், டெஸ்லா, ஓலா போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரி வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. முன்னணி எலெக்ட்ரிக் நிறுவனமான ஓலா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ., தூரம் வரை செல்லும் கார்களை 2024ம் ஆண்டில் தயாரிக்கவுள்ளதாக ஓலா அறிவித்துள்ளது. இந்த வாகனம் 4 வினாடிகளில் 60 கிமீ., வேகத்தை எட்டும் எனவும், நவீன வசதிகள் கொண்டதாக இக்கார் இருக்குமென ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.