கட் அவுட், பேனருக்கு தடை; மீறினால் நடவடிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்-அவுட் பேனர் வைக்கக்கூடாது, மீறினால் நடவடிக்கை: எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக கட்சியின் கூட்டங்களின் போது தலைவர்களின் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்கப்படுகிறது. இச்செயலுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவினர் பேனர்கள் மற்றும் கட் அவுட் வைக்கக்கூடாது என்றும் இந்த அறிவுறுத்தலை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை வைத்துள்ளார். சாலை மற்றும் தெருவின் வழியாக வழிநெடுக பேனர்கள் வைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்ட கூடாது என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறித்தியுள்ளார். ஏற்கனவே பலமுறை இதேபோல் அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தாலும் தொடர்ச்சியாக பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறதுதான்.