கருணாஸ் கேள்வி!

Filed under: சினிமா |

கருணாஸ் ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, “ராஜராஜசோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்து விட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது ராஜராஜசோழனை இந்து என்று மாற்ற நினைப்பது மட்டுமா நடந்தது?; தமிழை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை, குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள்; தஞ்சை பெரிய கோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள்; எங்கெல்லாம், எதையெல்லாம் காவியாக்க முடியுமோ அதையெல்லாம் மாற்ற முற்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.