கர்நாடக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Filed under: இந்தியா |

கர்நாடக மாநில அமைச்சர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் ஞானேந்திரா, “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அந்த அமைப்புக்கு கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது குறித்த தகவலை சேகரித்து வருகிறோம். இத்தகவல் அனைத்தும் சேகரித்த பிறகு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்” என அதிரடியாக அறிவித்துள்ளார்.