கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த காவலர்!

Filed under: தமிழகம் |

கழிவுநீர் கால்வாய் கோவையில் கனமழை பெய்த நிலையில் காவலர் ஒருவர் சுத்தம் செய்கின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்கிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கோவையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையில் பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகள் சேர்ந்து நீர் வெளியேற முடியாதபடி கிடந்துள்ளது. இதை பார்த்த காவலர் ஒருவர் கழிவுநீர் கால்வாய் அருகே தேங்கிய குப்பைகளை அகற்றி நீர் செல்ல வழி ஏற்படுத்தினார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த காவலருக்கு பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.