காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

Filed under: அரசியல்,இந்தியா |

சோக் கெலாட் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் தலைவர் போட்டியிலிருந்த விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் போட்டியிலிருந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சராகவே தொடர வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடுவதில் இருந்து அசோக் மறு பரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.