காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிரடி உத்தரவு!

Filed under: இந்தியா,தமிழகம் |

கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு உடனடியாக 2600 கன அடி நீரை நவம்பர் 23ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவின் அடிப்படையில் கர்நாடகா நீரை திறந்து விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியும் காவிரியில் நீர் திறக்காததை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு பின்னராவது திறந்து விடுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.