ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் இ.பி.எஸ் இன்று ஆலோசனை!

Filed under: தமிழகம் |

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதை சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டு, தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தத் திட்டத்தைப் பற்றி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.