காஷ்மீர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!

Filed under: உலகம்,சினிமா |

ஜம்மு காஷ்மீரில் வெளி உணவுகளை திரையரங்கிற்குள் கொண்டு செல்வது குறித்த தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் திரையரங்குகளுக்குள் வெளி உணவுகள், தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல பல அனுமதிப்பதில்லை என்பது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திரைப்படத்திற்கு வருபவர்கள் உணவு பொருட்கள் எடுத்து வருவதை திரையரங்குகள் தடுக்க அதிகாரமில்லை என தெரிவித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் “சினிமா திரையரங்கம் என்பது தனியாருக்கு சொந்தமானது. திரையரங்கிற்குள் உணவு, குளிர்பானங்கள் விற்பது குறித்து அவரே முடிவு செய்ய முடியும். திரையரங்கிற்குள் விற்கும் உணவு பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. எனவே வெளி உணவுகளை எடுத்து செல்ல திரையரங்குகள் தடை விதிக்க அவற்றிற்கு உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், அனைத்து திரையரங்குகளிலும் மக்களுக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் குடிப்பதற்கு விலையின்றி வழங்கப்படுதல் வேண்டும், குறிப்பிட்ட சில குழந்தை உணவுகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்காக கொண்டு வரும் பட்சத்தில் அதை அனுமதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.