குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்; டாக்டர் கிருஷ்ணசாமி!

Filed under: அரசியல்,தமிழகம் |

டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் பிரச்சாரத்தில் குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன், அந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும் அளவுக்கு சீசன் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குற்றாலத்தில் பழைய குற்றாலம், தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகள் இருக்கிறது. அந்த அருவிகளில் சீசன்களில் மட்டுமே தண்ணீர் வரும். ஆனால் நான் புதிய அருவியை உருவாக்கி வருடம் முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வேன். இதனால் வருடம் முழுவதும் சீசன் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்பகுதியில் உள்ள வணிகம் மேம்படும். குற்றாலத்தை உலகத்தரம் மிக்க சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் முடியாது. நான் வெற்றி பெற்று எம்.பி ஆனால் உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் இணையும்” என்று அவர் கூறியுள்ளார்.