கூகுள் நிறுவனத்திற்கு குண்டு மிரட்டல்!

Filed under: இந்தியா,உலகம் |

உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் புனே நகரில் கூகுளின் கிளை அலுவலகம் உள்ளது. இங்குள்ள முந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 11வது மாடியிலிருந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில், நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துணை ஆணையர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு, சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் பொய்புரளி என்று போலீசார் உறுதி செய்தனர். இந்த மிரட்டல் விடுத்தவர் பற்றி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, ஐதராபாத்தை நகரைச் சேர்ந்த ஒரு நபர் குடிபோதையில் இப்படி பேசியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.