கூடுதல் விமான சேவை சென்னையில் தொடக்கம்!

Filed under: சென்னை |

பல வெளிநாடுகளுக்கு சென்னையிலிருந்து விமான சேவை இருந்து வருகிறது. தற்போது இன்னும் கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையிலிருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய பல சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.