கூலி படத்தின் அப்டேட்டை கொடுத்த லோகேஷ்!

Filed under: சினிமா |

சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், பஹத் பாசில், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்கள் சிலரும் படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பஹத் பாசிலும் ஒருவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் இயக்கிய கடந்த சில படங்கள் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தியதாக இருந்தன. அது முதலில் ரசிக்கப்பட்டாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு திகட்ட ஆரம்பித்துவிட்டது. இப்போது அவர் இயக்கி வரும் “கூலி” திரைப்படம் போதைப் பொருள் பற்றியக் கதைக்களம் இல்லை என லோகேஷே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த படம் துறைமுகத்தில் நடக்கும் தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.