கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!

Filed under: தமிழகம் |

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 62% பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பாடங்கள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வந்தன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் குறைபாடு ஏற்படும் என பலரும் கவலை தெரிவித்து வந்தனர். கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியாகியது. அதில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 62 சதவீதம் மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர். அதிகமான மாணவர்கள் கணிதத்தில் அரியர் வைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் நேரடி தேர்வை எதிர்கொள்ளாததே இதற்கு காரணம் என அண்ணா பல்கலைகழகம் கருத்து தெரிவித்துள்ளது.