“கோப்ரா” ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முக்கிய நிறுவனம்!

Filed under: சினிமா |

வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “கோப்ரா” திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.


விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் “கோப்ரா” தான். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது.

திரைப்படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இப்போது கேரள ரிலீஸ் உரிமையை இபார் மீடியா ராபி மாதிரா மற்றும் டிரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.