சமயபுரம் பாத யாத்திரையில் விபத்தில் 5 பேர் பலி!

Filed under: தமிழகம் |

சரக்கு வாகனம் ஒன்று சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்ற பெண்கள் மேல் மோதி பலியாகி உள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றாலே பெண்கள் செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக பல பக்தர்களும் திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அவ்வாறாக சில பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வளம்பகுடி பகுதி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனம் மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். போலீஸ் விசாரணையில் இறந்தவர்கள் பெயர் மீனா, ராணி, மோகனாம்பாள், லெட்சுமி மற்றும் முத்துசாமி என தெரிய வந்துள்ளது. மேலும் சங்கீதா என்ற பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் வாகனம் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.