செங்கல்பட்டு விபத்தில் 5 பேர் பலி!

Filed under: தமிழகம் |

செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் அரசு பேருந்து லாரி மேல் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு விரைவு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. பேருந்தில் சிக்கிய பயணிகள் உதவி கேட்டு அலறியுள்ளனர். அங்கு விரைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பியுள்ளனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.