சம்பளத்தை உயர்த்திய பஹத் பாசில்!

Filed under: சினிமா |

நடிகர் ரஜினிகாந்த் “ஜெயிலர்” மற்றும் “லால் சலாம்” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குமென கூறப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பஹத் பாசில், மஞ்சு வாரியர், நானி, ஷர்வானந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. படத்தில் நடிப்பதற்காக பஹத் பாசிலுக்கு இதுவரை அவர் வாங்காத சம்பளமாக 8 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கவே அவருக்கு 5 கோடி ரூபாய்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.