சின்னசேலத்தில் உல்லாசத்தில் இருந்த சாமியார் கைது!

Filed under: தமிழகம் |

சின்ன சேலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 50 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முத்தையன் பில்லி சூனியம் எடுப்பது பெண்களை வசீகரம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கும் முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டிரைவரின் 50 சென்ட் நிலத்தை வாங்கி 4 லட்சம் பணம் முத்தையன் கொடுத்துள்ளார். டிரைவரின் மனைவியுடன் முத்தையனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் டிரைவருக்கு தெரிய வந்தவுடன் மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தன்னுடைய நிலத்தை திரும்பி கொடு என்று முத்தையனுடன் டிரைவர் கேட்டுள்ளார். அப்போது முத்தையன் உன்னுடைய மனைவியுடன் நான் உல்லாசமாக இருந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதையடுத்து டிரைவர் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் உடனடியாக முத்தையனை கைது செய்து அவரது வீட்டை சோதனை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முத்தையனின் லேப்டாப்பில் 50 பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்த வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவரை சிறையிலடைத்தனர். இச்சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.