சிபி சக்ரவர்த்திக்கு ‘நோ’ சொன்னாரா ரஜினி?

Filed under: சினிமா |

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி “டான்” திரைப்படத்தின் வெற்றியையடுத்து பெரிதும் கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த “டான்” திரைப்படம் கடந்த மே 13ம் தேதி ரிலீசாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுதும் வசூலித்தது.

இப்போது சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த படம் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன்பாக ஐஸ்வர்யா ரஜினி, இயக்கும் “லால் சலாம்“ படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் படத்துக்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், இப்போது அந்த கதையில் திருப்தி இல்லாத ரஜினி அந்த கதையை வேண்டாம் என சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இப்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.