சிறுவர், சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி ஆரம்பம்!

Filed under: இந்தியா |

சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 

6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதற்காக தடுப்பூசி Corbevaxக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ZyCov-D இன் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் DCGI பரிந்துரைத்துள்ளது. ZyCov-D-ஞி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. குஜராத்தை தளமாகக் கொண்ட Zydus Lifesciences நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ZyCov-D, உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 6 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.