சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பா?

Filed under: சினிமா |

ஏ ஆர் முருகதாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்தார். சிவகார்த்திகேயனை வைத்து தற்போது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிஜு மேனன் மற்றும் வித்யுத் ஜமால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதையடுத்து இப்போது நடிகர் விக்ராந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘சிங்கநடை’ என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.