செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் குறித்து நீதிபதி விளக்கம்

Filed under: அரசியல்,சென்னை |

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம் என்பது குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே அவரது சிகிச்சைக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது ஆனால் இது குறித்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி திரிவேதி விளக்கம் அளித்த போது “மூளையில் கட்டி குறித்து நான் கூகுளில் சில தகவல்களை பெற்றேன். மூளையில் ரத்தக்கட்டு என்றால் என்ன? அதற்கு தீர்வு என்ன என்பதை தேடினேன். அதன் பின்னர் அது மருந்துகளால் குணப்படுத்த கூடியது என்று அறிந்தேன். எனவேதான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று உத்தரவிட்டேன்” என்று கூறியுள்ளார். அவரது இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.